ADDED : மார் 08, 2025 01:29 AM
அ நிறம் | அளவு
மனித சங்கிலி மூலம்பெண் உரிமைவிழிப்புணர்வு
ராசிபுரம்:உலக மகளிர் தினத்தையொட்டி, ராசிபுரம் தாசில்தார் அலுவலகம் முன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், மனித சங்கிலி மற்றும் கருத்தரங்கம் நடந்தது. இதில் பெண்களின் உரிமை, சமூகத்தில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னை, வேலை இடங்களில் ஏற்படும் தடைகற்கள் ஆகியவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து அறிவுரை வழங்கினர்.
மேலும், ஒவ்வொரு துறையிலும் சாதித்த பெண்கள் குறித்து பேசினர். மாவட்ட நிர்வாகிகள் முருகேசன், ஸ்ரீதர், தாமோதரன், இளங்கோவன், ஆகியோர் தலைமையில், 50க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
