sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தேடப்படும் குற்றவாளி: போலீசார் அறிவிப்பு

/

தேடப்படும் குற்றவாளி: போலீசார் அறிவிப்பு

தேடப்படும் குற்றவாளி: போலீசார் அறிவிப்பு

தேடப்படும் குற்றவாளி: போலீசார் அறிவிப்பு


ADDED : மார் 14, 2025 01:53 AM

Google News

ADDED : மார் 14, 2025 01:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேடப்படும் குற்றவாளி: போலீசார் அறிவிப்பு

எலச்சிபாளையம்:எலச்சிபாளையம், வையப்பமலை அரசு பள்ளிகளில் கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்ற வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் உள்ள நபரை, எலச்சிபாளையம் போலீசார் தேடப்படும் தலை

மறைவு குற்றவாளியாக அறிவித்துள்ளனர். மல்லசமுத்திரம் அருகே, அத்திக்காடு துத்திபாளையம் பகுதியை

சேர்ந்தவர் வெங்கடாசலம் மகன் ரவி என்ற ரவிக்குமார். இவர், கடந்த நவ.,28, 2007ல், வையப்பமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 75 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கம்ப்யூட்டர் மற்றும் அதன் சர்வரை திருடி சென்றார். அதேபோல், 2007 டிச.,23ல், எலச்சிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில், ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கம்ப்யூட்டர், கேமரா, 'டிவி', டேப் ரெக்கார்டர் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றார்.

எலச்சிபாளையம் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின், ஜாமினில் வெளியே வந்தவர் இதுவரை, திருச்செங்கோடு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக உள்ளார். இவரை, தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக எலச்சிபாளையம் போலீசார் அறிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us