ADDED : மார் 27, 2025 01:55 AM
எள் விதை உற்பத்தி செய்ய யோசனை
நாமகிரிப்பேட்டை:நாமகிரிப்பேட்டை வேளாண் உதவி இயக்குனர் உமா மகேஸ்வரி வெளியிட்ட செய்திக்குறிப்பு: எள் விதை உற்பத்திக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில், கடந்த பருவத்தில் பிற மற்றும் அதே ரக பயிர் பயிரிட்டிருக்க கூடாது. அவ்வாறு பயிரிட்டிருந்தால் சான்றளிப்பு துறையால் சான்றளிக்கப்பட்ட அதே ரகமாக இருக்க வேண்டும்.
தழை, மணி, சாம்பல் சத்தை, ஒரு ஹெக்டேருக்கு, 50:25:25 கிலோ மற்றும் 10 கிலோ மாங்கனீசு சல்பேட்டை அடியுரமாக இட வேண்டும். பூக்கள் பூக்க தொடங்கும் சமயத்தில், 1 சதவீதம் டி.ஏ.பி., கரைசலை தெளிக்க வேண்டும். மீண்டும், 10 நாள் இடைவெளியில் இரண்டாவது தெளிப்பை தெளிக்க வேண்டும். அறுவடை செய்தபின், 3 முதல், 4 நாட்கள் வரை செடிகளை தலைகீழாக வைக்க வேண்டும். செடிகளை வளையக்கூடிய தன்மையுள்ள மூங்கில் தடியால் அடித்து விதைகளை பிரித்தெடுக்கலாம்.
நல்ல தரமான விதைகளை பெற, 1.6 மி.மீ., வட்ட கண் அளவு கொண்ட சல்லடை கொண்டு சலிக்க வேண்டும். 7-8 சதவீதம் ஈரப்பதம் வரும் வரை நன்கு உலர்த்த வேண்டும். காய்ந்த விதைகளை கார்பென்டாசிம் மருந்து கொண்டு, ஒரு கிலோ விதைக்கு, 2 கிலோ என்ற அளவில், 5 மி.லி., தண்ணீர் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். விதைகளின் ஈரப்பதத்தை, 8 முதல், 9 மாதமாக குறைத்து பின் சாக்கு அல்லது துணிப்பைகளில் குறுகிய கால சேமிப்பிற்காக, 8-9 மாதங்கள் சேமிக்கலாம்.