sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

அதிகாரிகள் வராததால் வாய்க்காலில் விடப்பட்ட மனுக்கள்

/

அதிகாரிகள் வராததால் வாய்க்காலில் விடப்பட்ட மனுக்கள்

அதிகாரிகள் வராததால் வாய்க்காலில் விடப்பட்ட மனுக்கள்

அதிகாரிகள் வராததால் வாய்க்காலில் விடப்பட்ட மனுக்கள்


ADDED : மார் 30, 2025 01:46 AM

Google News

ADDED : மார் 30, 2025 01:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அதிகாரிகள் வராததால் வாய்க்காலில் விடப்பட்ட மனுக்கள்

கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் யூனியன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட, கள்ளப்பள்ளி பஞ்சாயத்தில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்துக்கு, பஞ்., செயலாளர் வராததால், பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை வாய்க்காலில் விட்டனர்.

கிருஷ்ணராயபுரம் யூனியனுக்கு உட்பட்ட கள்ளப்பள்ளி பஞ்சாயத்து அலுவலகத்தில், நேற்று காலை, 11:00 மணிக்கு உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. யூனியன் அதிகாரிகள், பஞ்., செயலாளார்கள் மற்ற பஞ்சாயத்துகளில் நடக்கும் கிராம சபை கூட்டத்திற்கு சென்றததால், இதர அரசுத்துறை அதிகாரிகள் மட்டுமே கலந்து கொண்டனர். இங்குள்ள தற்காலிக பணியாளர்களை கொண்டு உலக தண்ணீர் தினம் குறித்து கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது.

அப்போது, கருப்பத்துாருக்கு கடந்த சில வாரங்களாக காவிரி நீர் வருவது இல்லை. இந்த பகுதிக்கு தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை மனுக்களை எழுதி கொண்டு வந்தனர். அப்போது மனுக்கள் வாங்க யூனியன் நிர்வாகம் மற்றும் பஞ்சாயத்து செயலாளர் வராததால், லாலாப்பேட்டை பஸ் ஸ்டாப் அருகில் செல்லும் கட்டளை தென்கரை வாய்க்கால் தண்ணீரில் மனுக்களை விட்டனர். இதனால் இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us