sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தேசிய ஊரக தொழிலாளர்கள்வேலை கேட்டு ஆர்ப்பாட்டம்

/

தேசிய ஊரக தொழிலாளர்கள்வேலை கேட்டு ஆர்ப்பாட்டம்

தேசிய ஊரக தொழிலாளர்கள்வேலை கேட்டு ஆர்ப்பாட்டம்

தேசிய ஊரக தொழிலாளர்கள்வேலை கேட்டு ஆர்ப்பாட்டம்


ADDED : ஏப் 02, 2025 01:48 AM

Google News

ADDED : ஏப் 02, 2025 01:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேசிய ஊரக தொழிலாளர்கள்வேலை கேட்டு ஆர்ப்பாட்டம்

நாமக்கல்,:நுாறு நாள் வேலை, அதற்கான கூலியை வழங்கக்கோரி, தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் மற்றும் தேசிய ஊரக தொழிலாளர்கள் சங்கம் சார்பில், நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட அமைப்பாளர் ஜெயராமன் தலைமை வகித்தார். அதில், நுாறு நாள் வேலைத்திட்ட கூலியை மத்திய அரசு குறைக்கக்கூடாது. வேலை ஆட்களையும் குறைக்ககூடாது. அத்திட்டத்தை முடக்கக்கூடாது. வேலை செய்த அனைவருக்கும், கூலி பாக்கியை வட்டியோடு வழங்க வேண்டும். வேலை நாட்களை குறைக்காமல், தொடர்ந்து வேலை கொடுக்க வேண்டும்.

ஒருநாள் ஊதியம், 700 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். ஓராண்டிற்கான வேலை நாட்களை 200 ஆக உயர்த்த வேண்டும். நிதி ஒதுக்கீட்டை குறைக்கக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. ஒன்றிய தலைவர்கள் சண்முகசுந்தரம், வருதராஜி, சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன், பாண்டியன், பூமாலை சுப்ரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us