/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
முகூர்த்த சீசன் எதிரொலி50 டன் காய்கறி ரூ.18.67 லட்சத்திற்கு விற்பனை
/
முகூர்த்த சீசன் எதிரொலி50 டன் காய்கறி ரூ.18.67 லட்சத்திற்கு விற்பனை
முகூர்த்த சீசன் எதிரொலி50 டன் காய்கறி ரூ.18.67 லட்சத்திற்கு விற்பனை
முகூர்த்த சீசன் எதிரொலி50 டன் காய்கறி ரூ.18.67 லட்சத்திற்கு விற்பனை
ADDED : மார் 03, 2025 01:37 AM
முகூர்த்த சீசன் எதிரொலி50 டன் காய்கறி ரூ.18.67 லட்சத்திற்கு விற்பனை
நாமக்கல்:முகூர்த்த சீசனால், நாமக்கல் உழவர் சந்தையில், நேற்று ஒரே நாளில், 50 டன் காய்கறிகள், பழங்கள், 18.67 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
நாமக்கல் கோட்டை மெயின் சாலையில், உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினமும், அதிகாலை, 5:00 முதல், 10:00 மணி வரை, நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள், தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள், பழங்களை கொண்டுவந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர்.
பொதுமக்களும் உழவர் சந்தைக்கு வந்து, தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். தற்போது, மாசி மாதம் முகூர்த்த சீசன் துவங்கியுள்ளது.
இதனால் நேற்று, வழக்கத்தை விட உழவர் சந்தையில் விறுவிறுப்பாக வியாபாரம் நடந்தது. மொத்தம், 184 விவசாயிகள் உழவர் சந்தைக்கு காய்கறி, பழங்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
அதன்படி, 42,105 கிலோ காய்கறி, 8,570 கிலோ பழங்கள், 20 கிலோ பூக்கள் என மொத்தம், 50,695 கிலோ விளைபொருட்கள் உழவர் சந்தைக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. அவற்றை, 10,139 பொதுமக்கள் வாங்கி சென்றனர்.
அதன் மூலம், 18 லட்சத்து, 67,095 ரூபாய்க்கு விற்பனையானது. தக்காளி ஒரு கிலோ, 15 ரூபாய், கத்தரி, 20, வெண்டை, 24, புடலங்காய், 24, பீர்க்கங்காய், 36, பாகற்காய், 32, சின்ன வெங்காயம், 40, பெரிய வெங்காயம், 40, தேங்காய், 60, இஞ்சி, 60, பூண்டு, 120 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.