/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ராசிபுரம் தபால் அலுவலகத்தில் தேசியக்கொடி ரூ.25க்கு விற்பனை
/
ராசிபுரம் தபால் அலுவலகத்தில் தேசியக்கொடி ரூ.25க்கு விற்பனை
ராசிபுரம் தபால் அலுவலகத்தில் தேசியக்கொடி ரூ.25க்கு விற்பனை
ராசிபுரம் தபால் அலுவலகத்தில் தேசியக்கொடி ரூ.25க்கு விற்பனை
ADDED : ஆக 13, 2024 06:16 AM
ராசிபுரம்: பிரதமர் மோடி, 'சுதந்திர தினத்தன்று ஒவ்வொருவர் வீட்டிலும் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும்' என, கேட்டுக்கொண்டார். அதன்படி, அனைத்து மக்களுக்கும் தேசியக்கொடி கிடைக்க வச-தியாக, தபால் அலுவலகங்களில் அதன் விற்பனை துவங்கப்பட்-டுள்ளது.
ராசிபுரம் தபால் அலுவலகத்தில், கடந்த, 2022ல், 2,200 தேசியக்-கொடி; 2023ல், 600 தேசியக் கொடிகள் விற்பனையாகின. இந்-தாண்டு, நேற்று முன்தினம் ராசிபுரம் தபால் அலுவலகத்தில், 500 கொடிகள் விற்பனைக்கு வந்தன. இந்த தேசியக்கொடியின் அகலம், 20 இன்ச், நீளம், 30 இன்ச் என்ற அளவில், ஒரு கொடி, 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று வரை விற்-பனை மந்தமாகவே இருந்தது.
இதுவரை, 100க்கும் மேற்பட்ட கொடிகள் மட்டுமே விற்பனை-யாகி உள்ளன. நேற்று, பா.ஜ., மாவட்ட செயலாளர் தமிழரசு மற்றும் மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில துணைத்தலைவர் லோகேந்திரன் ஆகியோர் தேசியக்கொடியை வாங்கி பொது மக்க-ளுக்கு வழங்கினர்.

