/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பட்ஜெட்டில் பணி நிரந்தர அறிவிப்பு பகுதி நேர ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு
/
பட்ஜெட்டில் பணி நிரந்தர அறிவிப்பு பகுதி நேர ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு
பட்ஜெட்டில் பணி நிரந்தர அறிவிப்பு பகுதி நேர ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு
பட்ஜெட்டில் பணி நிரந்தர அறிவிப்பு பகுதி நேர ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு
ADDED : மார் 04, 2025 06:17 AM
நாமக்கல்: 'பகுதிநேர ஆசிரியர், 12,000 பேரை பணி நிரந்-தரம் செய்யும் அறிவிப்பை, தமிழக அரசின் பட்-ஜெட்டில் வெளியிட வேண்டும்'
என, பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:'நுாறு நாளில் பணி நிரந்தரம் செய்வோம்' என்ற தி.மு.க., தேர்தல் வாக்குறுதியை பகுதிநேர ஆசி-ரியர்கள் நம்பி இருந்தனர். ஆனால், 42 மாதங்க-ளாகியும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. கடந்த, 15 ஆண்டுகளாக தற்காலிகமாக பகுதி-நேர ஆசிரியர்களாக உடற்கல்வி பாடத்தில், 3,700 பேர், ஓவிய பாடத்தில், 3,700, கணினி அறி-வியல், 2,000, தையல் பாடம், 1,700, இசை, 300, தோட்டக்கலை, 20, கட்டடக்கலை, 60, வாழ்வியல் நிறம் பாடத்தில், 200 பேர் என, 12,000 பேர் பணி-புரிகின்றனர். இவர்களை இனியும் தாமதம் செய்யாமல் முதல்வர் ஸ்டாலின் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் உள்-ளதால், இதை அரசாணையாக்க வேண்டும். எனவே வரும், 14ல் தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில், பணி நிரந்-தரம் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.