/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பொதுமக்களின் மனுக்களுக்கு 30 நாட்களில் தீர்வு: அமைச்சர்
/
பொதுமக்களின் மனுக்களுக்கு 30 நாட்களில் தீர்வு: அமைச்சர்
பொதுமக்களின் மனுக்களுக்கு 30 நாட்களில் தீர்வு: அமைச்சர்
பொதுமக்களின் மனுக்களுக்கு 30 நாட்களில் தீர்வு: அமைச்சர்
ADDED : ஆக 24, 2024 07:16 AM
ராசிபுரம்: ராசிபுரம் யூனியன், சிங்களாந்தபுரம், சந்தைபேட்டையில், நேற்று, 'மக்களுடன் முதல்வர்' சிறப்பு முகாம் நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்து பேசியதாவது: கடைக்கோடி கிராம பகுதிகளில் வசிக்கும் மக்க-ளுக்கும், அரசின் திட்டங்கள், சேவைகள் எளிதாக கிடைக்க, 'மக்-களுடன் முதல்வர்' திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதில், பொதுமக்கள் அதிகளவில் அணுகும், 15 அரசு துறைகள் சார்ந்த, 44 வகையான கோரிக்கைகளை பெற்று, 30 தினங்களுக்குள் தீர்வு காண்பதற்காக முதல்வரின் நேரடி கண்காணிப்பில் முகாம் நடத்-தப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார். ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஜெகநாதன், தனித்துணை ஆட்சியர் பிரபாகரன் உள்பட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

