sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மயில் கூட்டம் படையெடுப்பால் விளை நிலம் நாசம் சரணாலயம் அமைத்து பாதுகாக்கப்படுமா?

/

மயில் கூட்டம் படையெடுப்பால் விளை நிலம் நாசம் சரணாலயம் அமைத்து பாதுகாக்கப்படுமா?

மயில் கூட்டம் படையெடுப்பால் விளை நிலம் நாசம் சரணாலயம் அமைத்து பாதுகாக்கப்படுமா?

மயில் கூட்டம் படையெடுப்பால் விளை நிலம் நாசம் சரணாலயம் அமைத்து பாதுகாக்கப்படுமா?


ADDED : மார் 04, 2025 06:11 AM

Google News

ADDED : மார் 04, 2025 06:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: 'தேசிய பறவையான மயில்கள், கூட்டம் கூட்டமாக படையெ-டுத்து சென்று விளை நிலைங்களில் புகுந்து பயிர்களை அழித்து நாசம் செய்வதால், விவசாயிகள் செய்வதறியாமல் விழிபிதுங்கி உள்ளனர். அதனால், மயில்களை பிடித்து சரணாலயம் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில், காவிரிக்கரையோர பகுதிகளான பள்-ளிப்பாளையம், ப.வேலுார், மோகனுார் போன்ற பகுதிகளிலும், கொல்லிமலை, நாமக்கல், சேந்தமங்கலம் என, மாவட்டம் முழு-வதும் பரவலாக, வாழை, கரும்பு, நெல், நிலக்கடலை, சோளம் போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன.

காவிரி கரையோரத்தில் ஆற்று நீரையும், மற்ற இடங்களில், வாய்க்கால் மற்றும் கிணற்று நீரையும் பயன்படுத்தி அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில், நம் தேசிய பறவையான மயில், மாவட்டம் முழுவதும் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. மயில்கள், கூட்டம் கூட்டமாக சென்று, விளை நிலங்களில் சாகு-படி செய்துள்ள பயிர்களை தின்று நாசம் செய்து வருகின்றன. அவற்றை விரட்டினாலும், கூட்டம் கூட்டமாக வந்து செல்-வதால், கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் விழிபிதுங்கி உள்-ளனர். மேலும், கடலை, நெல், சோளம் போன்ற பயிர்களை அழித்து வருகிறது. தேசிய பறவை என்பதால், விவசாயிகள் அவற்றை விரட்டி மட்டுமே விடுகின்றனர். அவைகளால், விவசா-யிகள் பெருத்த நஷ்டத்துக்கு ஆளாகி உள்ளனர். இதுகுறித்து, சேந்தமங்கலம் அடுத்த மலைவேப்பன்குட்டையை சேர்ந்த இயற்கை விவசாயி குமரேசன் கூறியதாவது:நம் நாட்டின் தேசிய பறவையான மயில், தமிழ் கடவுளான முரு-கனின் வாகனமாக பார்க்கப்படுகிறது. ஈரோடு மற்றும் பெருந்-துறை பகுதியில் மட்டுமே இருந்த இப்பறவை, நாமக்கல் மாவட்-டத்தின் பெரும்பாலான பகுதிகளில் இடம் பெயர்ந்துள்ளது. அதனால், இப்பகுதியில் விவசாயம் செய்பவர்கள் பெரும் துயரத்துக்கு ஆளா-கின்றனர். குறிப்பாக நிலக்கடலை, தட்டைப்பயறு, பாசிப்பயறு, துவரை போன்ற தானிய வகைகள், தக்காளி உள்ளிட்ட பல காய்க-றிகளை, கொத்தி பெரும் பகுதியை வீணடிக்கிறது. அதன் காரண-மாக, விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. அதிக-ளவில் பெருகியுள்ள மயில்களை, வனத்துறையினர் பிடித்து, வனப்பகுதியில் சரணாலயம் அமைத்து, அவற்றுக்கு தேவையான உணவுகளை அளித்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us