ADDED : மார் 10, 2025 01:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டூவீலர் மோதிவாட்ச்மேன் பலி
புதுச்சத்திரம்:புதுச்சத்திரம் யூனியன், கல்யாணி கிராமத்தை சேர்ந்தவர் விசுவநாதன், 80. இவர், பாச்சல் அருகே உள்ள தனியார் குடேனில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை, பணி முடிந்து வீட்டிற்கு பாச்சல் பிரிவு சாலையில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது வளைவில் திரும்பும்போது, பின்னால் வந்த டூவீலர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த விசுவநாதனை, அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்
உயிரிழந்தார். புதுச்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
******************************