/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
புதன்சந்தை மாட்டு சந்தையில் ரூ.1.60 கோடிக்கு வியாபாரம்
/
புதன்சந்தை மாட்டு சந்தையில் ரூ.1.60 கோடிக்கு வியாபாரம்
புதன்சந்தை மாட்டு சந்தையில் ரூ.1.60 கோடிக்கு வியாபாரம்
புதன்சந்தை மாட்டு சந்தையில் ரூ.1.60 கோடிக்கு வியாபாரம்
ADDED : செப் 04, 2024 09:30 AM
புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் யூனியன், புதன்சந்தையில் செவ்-வாய்க்கிழமை தோறும் மாட்டுச்சந்தை நடக்கி-றது. இந்த சந்தைக்கு, நவணி, சேந்தமங்கலம், வேலகவுண்டம்பட்டி, புதுச்சத்திரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வாரந்-தோறும் விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இதேபோல், கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள், லாரிகளில் மாடுகளை மொத்தமாக வாங்கி சந்தைக்கு விற்-பனைக்கு கொண்டு வருகின்றனர்.
நேற்று நடந்த மாட்டு சந்தையில் மாடுகள் விற்-பனை குறைந்தது. இதனால், கடந்த வாரம் 2 கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடந்த நிலையில், நேற்று, 1.60 கோடி ரூபாய்க்கு மட்டுமே வர்த்தகம் நடந்தது.