sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வரும் 21ல் பள்ளி, 22ல் கல்லுாரி மாணவர்களுக்குமாவட்ட அளவில் கவிதை, பேச்சு போட்டி: கலெக்டர்

/

வரும் 21ல் பள்ளி, 22ல் கல்லுாரி மாணவர்களுக்குமாவட்ட அளவில் கவிதை, பேச்சு போட்டி: கலெக்டர்

வரும் 21ல் பள்ளி, 22ல் கல்லுாரி மாணவர்களுக்குமாவட்ட அளவில் கவிதை, பேச்சு போட்டி: கலெக்டர்

வரும் 21ல் பள்ளி, 22ல் கல்லுாரி மாணவர்களுக்குமாவட்ட அளவில் கவிதை, பேச்சு போட்டி: கலெக்டர்


ADDED : ஜன 12, 2025 01:17 AM

Google News

ADDED : ஜன 12, 2025 01:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: 'தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், பள்ளி மாணவர்களுக்கு, வரும், 21லும், கல்லுாரி மாணவர்களுக்கு, வரும், 22லும், கவிதை, கட்டுரை, பேச்சு போட்டி நடக்கிறது' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:பள்ளி, கல்லுாரி மாணவர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், ஆண்டுதோறும் மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 2024-25ம் ஆண்டுக்கு, மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு, வரும், 21ல், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், கல்லுாரி மாணவ, மாணவியருக்கு, வரும், 22ல், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லுாரியிலும், கவிதை, கட்டுரை, பேச்சு போட்டி நடக்கிறது.

போட்டிகளில், பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியர், கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்கலாம். போட்டிக்கான தலைப்புகள் போட்டி நடக்கும் நாள் அன்று, போட்டி துவங்குவதற்கு முன் அறிவிக்கப்படும்.

போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு, பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு தனித்தனியே, மாவட்ட அளவில் முறையே, 10,000, 7,000, 5,000 ரூபாய் பரிசு வழங்கப்படும். மாவட்ட அளவில் முதல் பரிசு பெறும் மாணவர்கள், மாநில போட்டியில் கலந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தை, 04286- 292164 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us