sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

விலங்குகளால் பலியாகும் விவசாயிக்கு ரூ.25 லட்சம் வழங்க அரசுக்கு கோரிக்கை

/

விலங்குகளால் பலியாகும் விவசாயிக்கு ரூ.25 லட்சம் வழங்க அரசுக்கு கோரிக்கை

விலங்குகளால் பலியாகும் விவசாயிக்கு ரூ.25 லட்சம் வழங்க அரசுக்கு கோரிக்கை

விலங்குகளால் பலியாகும் விவசாயிக்கு ரூ.25 லட்சம் வழங்க அரசுக்கு கோரிக்கை


ADDED : பிப் 07, 2025 01:06 AM

Google News

ADDED : பிப் 07, 2025 01:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விலங்குகளால் பலியாகும் விவசாயிக்கு ரூ.25 லட்சம் வழங்க அரசுக்கு கோரிக்கை

கிருஷ்ணகிரி,:தமிழகத்தில், விவசாய சங்கத்தை உருவாக்கி, உணவு உற்பத்தியை பெருக்க காரணமாக இருந்த நாராயணசாமி நாயுடுவின், 100-வது பிறந்த நாளையொட்டி, கிருஷ்ணகிரியில், தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில், பேரணி மற்றும் விவசாயிகள் மாநாடு நேற்று நடந்தது. மாநாட்டில், தமிழக விவாயிகள் சங்க மாநிலத்தலைவர் ராமகவுண்டர், நாராயணசாமி நாயுடுவின் படத்திற்கு மலர் துாவி மரியாதை செய்தார்.

பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது: வன விலங்குகளால் பலியாகும் விவசாயிகளுக்கு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் வழங்குவது போல், தமிழகத்திலும் இழப்பீடு தொகையாக நபர் ஒன்றுக்கு, 25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். விவசாய நிலங்களின் பெயரில் ரிசர்வ் வங்கி கடன் வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளதை, மீண்டும் தொடர்ந்து வழங்க வேண்டும். உலக நாடுகளில் உணவு தரத்தின் விலை, 50 மடங்கு உயர்ந்துள்ள நிலையில், இந்தியாவில் மட்டும் விவசாய விளைப்பொருட்களை ஏற்றுமதி செய்யாமல், மத்திய அரசு இந்திய விவசாயிகளை வஞ்சித்து வருகிறது. குறிப்பாக, உலக நாடுகளில், 400 கோடி மக்களுக்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை பயன்படுத்தி, இந்தியாவில் உற்பத்தியாகும் விளைப்பொருட்களை மத்திய அரசு ஏற்றுமதி செய்ய முன்வர வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறினார்.மாநில நர்சரி சங்க தலைவர் கண்ணையா, மாநில செயலாளர் வேலுமணி, விவசாயி மாரிசெட்டி, சங்க ஆலோசகர் நஷீர் அகமத், மாநில மகளிர் அணி தலைவர் பெருமா உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us