sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மாவட்டத்தில் ரோந்து பணிக்கு30 டூவீலர் சேலம் டி.ஐ.ஜி., துவக்கி வைப்பு

/

மாவட்டத்தில் ரோந்து பணிக்கு30 டூவீலர் சேலம் டி.ஐ.ஜி., துவக்கி வைப்பு

மாவட்டத்தில் ரோந்து பணிக்கு30 டூவீலர் சேலம் டி.ஐ.ஜி., துவக்கி வைப்பு

மாவட்டத்தில் ரோந்து பணிக்கு30 டூவீலர் சேலம் டி.ஐ.ஜி., துவக்கி வைப்பு


ADDED : மார் 01, 2025 01:36 AM

Google News

ADDED : மார் 01, 2025 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாவட்டத்தில் ரோந்து பணிக்கு30 டூவீலர் சேலம் டி.ஐ.ஜி., துவக்கி வைப்பு

நாமக்கல்:நாமக்கல் மாவட்டத்தில் ரோந்து பணி மேற்கொள்ள, போலீஸ் ஸ்டேஷன்களுக்கு, 30 டூவீலர் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்களை, சேலம் டி.ஐ.ஜி., உமா துவக்கி வைத்தார். அப்போது, எஸ்.பி., ராஜேஸ்கண்ணன் கூறியதாவது:

டூவீலர் ரோந்து வாகனங்களில், ஜி.பி.எஸ்., கருவி, பிளிங்கர்ஸ் லைட், பப்ளிக் அட்டர்சிங் சிஸ்டம் மற்றும் சைரன் பொருத்தப்பட்டு, காவல் கட்டுப்பாட்டு அறை மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

மேலும், இப்பணியில் ஈடுபடும் போலீசாருக்கு, எஸ்.பி., அலுவலகத்தில் இருந்து குற்றவாளிகளை கண்காணிப்பதற்கான, எப்.ஆர்.எஸ். ஆப், வாகனங்களை கண்காணிப்பதற்கான, 'வேகன் சமன்வே ஆப்' மற்றும் அவசர அழைப்புகளை தொடர்பு கொள்வதற்கான காவல் உதவி ஆப் ஆகியவை தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

இப்பணியில் ஈடுபடும் போலீசார், சுழற்சி முறையில், 24 மணி நேரமும் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதன் மூலம் காவல் துறைக்கு வரும் அவசர அழைப்புகளுக்கு, உடனடியாக சம்பவ இடம் சென்று துரித நடவடிக்கை மேற்கொள்ளும் வகையிலும், காவல் நிலைய எல்லைப்பகுதியில், 24 மணி நேரமும் தொடர்ந்து ரோந்து பணியிலும் ஈடுபட முடியும்.

முதல் கட்டமாக, 30 டூவீலர் ரோந்து வாகனம் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக, மேலும், 30 வாகனங்கள் வழங்கப்படும். மேலும், தமிழக முதல்வர் உத்தரவுப்படி, இன்ஸ்பெக்டர் முதல் போலீசார் வரை, மாவட்ட எல்லைக்குள் அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்ய, இலவச பஸ் பாஸ், டி.ஐ.ஜி., மூலம் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.ஏ.எஸ்.பி., ஆகாஷ்ஜோஷி, கூடுதல் எஸ்.பி.,க்கள், டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,ககள், போலீசார் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us