/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ராசிபுரம் உழவர் சந்தையில்34 டன் காய்கறி விற்பனை
/
ராசிபுரம் உழவர் சந்தையில்34 டன் காய்கறி விற்பனை
ADDED : மார் 03, 2025 01:32 AM
ராசிபுரம் உழவர் சந்தையில்34 டன் காய்கறி விற்பனை
ராசிபுரம்:ராசிபுரம் உழவர் சந்தையில், நேற்று தக்காளி கிலோ, 16, கத்தரி, 30, வெண்டை, 30, புடலை, 22, பீர்க்கன், 35, பாகல், 40, சுரைக்காய், 10, பச்சை மிளகாய், 34, முருங்கை, 80, சின்ன வெங்காயம், 45, பெரிய வெங்காயம், 40, முட்டைகோஸ், 20, கேரட், 75, பீன்ஸ், 50, பீட்ரூட், 30, வாழைப்பழம், 40, கொய்யா, 50, பப்பாளி, 30, தர்பூசணி, 20, எலுமிச்சை, 30, விலாம்பழம், 48 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று ஒரே நாளில், 245 விவசாயிகள், தங்களது விளை பொருட்களை விற்க கொண்டு வந்திருந்தனர். 26,750 கிலோ காய்கறி, 7,120 கிலோ பழங்கள், 430 கிலோ பூக்கள் என மொத்தம், 34,120 கிலோ காய்கறி, பழங்கள் விற்பனையாகின. இதன் மொத்த மதிப்பு, 12.59 லட்சம் ரூபாய் ஆகும். 6,270 பேர் உழவர் சந்தைக்கு வந்து பொருட்களை வாங்கி சென்றனர்.
கடந்த வாரத்தை விட கத்தரி, வெண்டை ஆகியவை விலை மிகவும் குறைந்திருந்தது.