/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தொழிலாளர் நல உதவிகள் ரூ.3.76 கோடி விடுவிப்பு
/
தொழிலாளர் நல உதவிகள் ரூ.3.76 கோடி விடுவிப்பு
ADDED : ஜூலை 07, 2024 07:15 AM
நாமக்கல் : தேர்தல் காலத்தில் நிறுத்தி வைத்திருந்த தொழிலாளர் ஓய்வூ-தியம், கல்வி உதவித்தொகை என, 3.76 கோடி ரூபாய் விடுவிக்-கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில், தொழிலாளர் நல வாரியத்தில், 3.30 லட்சம் உறுப்பினர்கள் பதிவு செய்துள்ளனர். இதில், 29,000 பேர் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். உறுப்பினர்களின் குடும்பத்-தினர் உயர்கல்வி உள்ளிட்ட படிப்புகளுக்கு கல்வி உதவித்-தொகை, திருமண உதவித்தொகை, விபத்து மரணம், இயற்கை மரணம், ஈமச்சடங்கு, மகப்பேறு, குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட நல உதவிகளை பெற்று வருகின்றனர். லோக்சபா தேர்தல் விதி-களால், நலத்திட்ட உதவிகள் வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டி-ருந்தன.
இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறை நீங்கியதால், நாமக்கல் மாவட்டத்தில் தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்க-ளுக்கு ஓய்வூதியம், கல்வி உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவித்தொகைகள், மே மாதம் வரை அவரவர் வங்கி கணக்குக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த, ஜூன் மாதத்தில் மட்டும் கட்டுமான தொழிலாளர்க-ளுக்கு, 2 கோடியே, 59 லட்சத்து, 76,000 ரூபாயும், உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு, 79.34 லட்சம் ரூபாயும், டிரைவர்-களுக்கு, 37.15 லட்சம் ரூபாய் என மொத்தம், 3 கோடியே, 76 லட்சத்து, 26,000 ரூபாய்க்கு நலத்திட்ட தொகை வழங்கப்பட்-டது.