/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சுமை துாக்கும் தொழிலாளி டூவீலர் மோதி உயிரிழப்பு
/
சுமை துாக்கும் தொழிலாளி டூவீலர் மோதி உயிரிழப்பு
ADDED : ஆக 18, 2024 04:02 AM
மல்லசமுத்திரம்,: மல்லசமுத்திரம் அருகே, சத்யா நகரை சேர்ந்தவர் கந்தசாமி, 55; மல்லசமுத்திரம் டி.சி.எம்.எஸ்.,ல் சுமை துாக்கும் தொழி-லாளி. இவர், நேற்று முன்தினம் இரவு, 7:45 மணிக்கு, வேலை முடிந்து, வீட்டிற்கு செல்ல, டி.சி.எம்.எஸ்., எதிரே உள்ள சாலையை, சைக்கிளில் கடக்க முயன்றார்.
அப்போது, திருச்செங்-கோட்டில் இருந்து மல்லசமுத்திரம் நோக்கி அதிவேகமாக வந்த, 'ஹோண்டா சைன்' டூவீலர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், கந்தசாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகிலிருந்த-வர்கள் மீட்டு, திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்-தனர். அங்கு அவர் உயிரிழந்தார். கந்தசாமிக்கு, 25 வயதில் ஒரு-மகன், 23 வயதில் ஒரு மகள் உள்ளனர். இதுகுறித்து, மல்லசமுத்-திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.