/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பஞ்., துணைத்தலைவர் தி.மு.க.,வில் ஐக்கியம்
/
பஞ்., துணைத்தலைவர் தி.மு.க.,வில் ஐக்கியம்
ADDED : செப் 08, 2024 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பஞ்., துணைத்தலைவர்
தி.மு.க.,வில் ஐக்கியம்
பள்ளிப்பாளையம், செப். 8-
பள்ளிப்பாளையம் யூனியனுக்குட்பட்ட புதுப்பாளையம் பஞ்., துணைத்தலைவராக இருப்பவர் சந்திரா, 45; இவரது கணவர் செந்தில். இருவரும் அ.தி.மு.க.,வில் இருந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம், இருவரும் அ.தி.மு.க.,வில் இருந்து விலகி, பள்ளிப்பாளையம் தெற்கு ஒன்றிய தி.மு.க., பொறுப்பாளர் இளங்கோவன் தலைமையில், நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் முன்னிலையில், தி.மு.க.,வில் இணைந்தனர். கட்சியில் ஐக்கியமான இவர்களை, மாவட்ட செயலாளர் மதுாரசெந்தில் சால்வை அணிவித்து வரவேற்றார்.