/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பஸ் ஸ்டாண்டில் கூடும் சந்தையால் பயணிகள் தவிப்பு
/
பஸ் ஸ்டாண்டில் கூடும் சந்தையால் பயணிகள் தவிப்பு
ADDED : ஆக 26, 2024 02:45 AM
ராசிபுரம்: ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் பின்புறம், வாரச்சந்தைக்கான இடம் உள்ளது. வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை சந்தை கூடுகி-றது. ராசிபுரம் தாலுகாவில் உள்ள மிகப்பெரிய வாரச்சந்தை இங்கு தான் உள்ளது.
அதுமட்டுமின்றி, நகராட்சி மக்கள் மட்டுமின்றி கிராம மக்கள், நகராட்சி பகுதியில் வேலை செய்பவர்கள், இவ்வழியாக வேலைக்கு செல்பவர்கள் என, அனைவரும் சந்தைக்கு வரு-வதால், செவ்வாய்க்கிழமை மாலை பஸ் ஸ்டாண்டில் மக்கள் கூட்டம் அலைமோதும்.
அதுமட்டுமின்றி சந்தை கடைகளை பஸ் ஸ்டாண்டிற்குள் வைத்-துக்கொள்கின்றனர். தற்காலிக கூடாரம் அமைத்து, 50க்கும் மேற்-பட்ட கடைகளை போட்டுக்கொள்கின்றனர்.
இதனால், பஸ் ஸ்டாண்டிற்குள் பொதுமக்கள் பெரும்பாலும் வந்து விடுகின்றனர். மேலும், பஸ் ஸ்டாண்டிற்குள்ளேயே வாக-னங்களை நிறுத்தி விடுவதால், பஸ் செல்வதற்கும், பஸ் ஏற வரும் பயணிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர்.
முக்கியமாக குடும்பத்துடன் வருபவர்கள், பஸ் ஏற முடியாமல் தவிக்கின்றனர்.
பஸ்சும் ஆங்காங்கே நிறுத்தி விடுவதால் மிகவும் சிரமப்படுகின்-றனர்.
எனவே சந்தை கடைகளுக்கும் காய்கறி வாங்க வரும் பொது-மக்கள் வண்டிகளை நிறுத்தவும் போதுமான இடம் ஒதுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

