ADDED : ஏப் 05, 2025 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரசு பள்ளியில்பட்டமளிப்பு விழா
ராசிபுரம்:ராசிபுரம் நகராட்சி, வி.நகர் நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை கொண்டாட்ட திருவிழா, நேற்று நடந்தது. வட்டார கல்வி அலுவலர் அருள்மணி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராஜசேகர் ஆகியோர் கலந்துகொண்டனர். தலைமையாசிரியர் லட்சுமி வரவேற்றார். எஸ்.எம்.சி., தலைவர் காயத்ரி, துணைத்தலைவர் பொன் ரமேஷ் மற்றும் உறுப்பினர்கள் பி.டி.ஏ., உறுப்பினர்கள், பெற்றோர், தேசிய பசுமைப்படை மாணவர்கள், சாரணர் இயக்க மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர். குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, மாணவ, மாணவியர் விழிப்புணர்வு பேரணி சென்றனர். 2024-25ம் கல்வியாண்டில், யு.கே.ஜி., பயின்ற மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழாவும் நடந்தது.

