நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம், சேந்தமங்கலம் வட்டம், அக்கியம்பட்டி கிராமத்தில் அமைந்திருக்கும் குரு ராகவேந்திரா பிருந்தாவனத்தில், நேற்று காலை குரு வார வழிபாட்டை யொட்டி மூலவர் குரு ராகவேந்திரா மற்றும் பரிவார தெய்வங்களான லட்சுமி நரசிம்மர், விநாயகர், ராமர், சீதை மற்றும் மகாலட்சுமி உள்ளிட்ட சுவாமிகளுக்கு பால் தயிர் தேன் உள்பட பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டன.
இந்நிகழ்வில் சேந்தமங்கலம் சுற்று வட்டாரத்தில் உள்ள பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நிறைவாக பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.