/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மது குடித்தபோதுதகராறு: 2 பேர் கைது
/
மது குடித்தபோதுதகராறு: 2 பேர் கைது
ADDED : மார் 19, 2025 01:19 AM
மது குடித்தபோதுதகராறு: 2 பேர் கைது
புதுச்சத்திரம்:புதுச்சத்திரம் அடுத்த குருசாமிபாளையத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ், 27; தறித்தொழிலாளி. இவரது நண்பர் பிரபு. இருவரும் குருசாமிபாளையத்தில் உள்ள டாஸ்மாக் பாரில் மது குடித்துவிட்டு வெளியில் வந்துள்ளனர். அந்த சமயம், ராசிபுரம் அணைப்பளையத்தை சேர்ந்த நேரு, 25, அவரது நண்பர் வேலு, 28, ஆகிய, இரண்டு பேரும் மது குடித்து விட்டு நின்று கொண்டிருந்தனர். அப்போது, பிரபுவிடம் இருவரும் தகராறு செய்துள்ளனர். இதை மோகன்ராஜ் தட்டி கேட்டதால், ஆத்திரமடைந்த நேரு, வேலு ஆகிய இருவரும் சேர்ந்து, மோகன்ராஜை தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்தவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து புகார்படி, புதுச்சத்திரம் போலீசார், நேரு, வேலுவை கைது செய்தனர்.