/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கல்லுாரி மாணவியைதாக்கிய 2 பேர் கைது
/
கல்லுாரி மாணவியைதாக்கிய 2 பேர் கைது
ADDED : ஏப் 03, 2025 01:35 AM
கல்லுாரி மாணவியைதாக்கிய 2 பேர் கைது
நாமகிரிப்பேட்டை:நாமகிரிப்பேட்டை, தொ.ஜேடர்பாளையம் ஊராட்சி, மேற்கு தெருவை சேர்ந்தவர் வையாபுரி மகள் ரோகினி, 24; இவர், தனியார் கல்லுாரியில் பி.எட்., படித்து வருகிறார். பெருமாகவுண்டம்பாளையம், வன்னியர் தெருவை சேர்ந்தவர் இளமதி மகன் தினேஷ்குமார், 26; டிரைவர். இவர், சில மாதங்களுக்கு முன்
ரோகினியை திருமணம் செய்துள்ளார். ஆனால், திருமணமான சில தினங்களிலேயே இருவரும் பிரிந்துவிட்டனர்.
தற்போது ரோகனி, தந்தை வீட்டில் வசித்து வருகிறார். நேற்று, ரோகனி வீட்டிற்கு தினேஷ்குமார் மற்றும் அவரது அண்ணன், நவீன்குமார், 28, இருவரும் சென்று ரோகினியை தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து ரோகினி அளித்த புகார்படி, நாமகிரிப்பேட்டை போலீசார், தினேஷ்குமார், நவீன்குமாரை கைது செய்தனர்.

