/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பட்டுக்கூடு 326 கிலோரூ.2.22 லட்சத்திற்கு ஏலம்
/
பட்டுக்கூடு 326 கிலோரூ.2.22 லட்சத்திற்கு ஏலம்
ADDED : மார் 15, 2025 02:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பட்டுக்கூடு 326 கிலோரூ.2.22 லட்சத்திற்கு ஏலம்
ராசிபுரம்:ராசிபுரத்தில் கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது. இங்கு, தினசரி பட்டுக்கூடு விற்பனை நடக்கிறது.
நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பட்டு விவசாயிகள், ராசிபுரத்திற்கு வந்து பட்டுக்கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர். நேற்று, 326 கிலோ பட்டுக்கூடு விற்பனையானது.
இதில், அதிகபட்சம் கிலோ, 740 ரூபாய், குறைந்தபட்சம், 482 ரூபாய், சராசரி, 684 ரூபாய் என, 2.22 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.