/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கோர்ட் பணியாளரிடம்5 பவுன் நகை பறிப்பு
/
கோர்ட் பணியாளரிடம்5 பவுன் நகை பறிப்பு
ADDED : பிப் 09, 2025 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோர்ட் பணியாளரிடம்5 பவுன் நகை பறிப்பு
புதுச்சத்திரம்:நாமக்கல் - மோகனுார் ரோடு பகுதியை சேர்ந்தவர் ரோஜாரமணி, 50; இவர் ராசிபுரம் நீதிமன்றத்தில் சிராஸ்தாரராக பணிபுரிந்து வருகிறார். கடந்த, 6ல் வேலை முடிந்து, மாலை, 6:00 மணிக்கு ரோஜாரமணி டூவீலரில் புதன்சந்தை அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது பின்னால் டூவீலரில் வந்த மர்ம நபர்கள் இருவர், ரோஜாரமணி கழுத்தில் அணிந்திருந்த, 5 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பினர். இதுகுறித்து புகார்படி, புதுச்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

