ADDED : ஜூன் 14, 2024 01:12 AM
ப.வேலுார், நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அருகே வெங்கமேடு தேசிய வேளாண்மை சந்தையில், வியாழன் தோறும் தேங்காய் பருப்பு ஏலம் நடக்கிறது. ப.வேலுார், மோகனுார், பொத்தனுார், பாண்டமங்கலம், வெங்கரை, கபிலர்மலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, விவசாயிகள் தேங்காய் பருப்பை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
கடத்த வாரம் நடந்த ஏலத்திற்கு, 5,840 கிலோ தேங்காய் பருப்பு வரத்தானது. இதில், அதிகபட்சம் கிலோ, 93.19 ரூபாய், குறைந்தபட்சம், 90.79 ரூபாய், சராசரியாக, 92.99 ரூபாய் என, மொத்தம், 3.98 லட்சத்துக்கு வர்த்தகமானது.
இதேபோல், நேற்று நடந்த ஏலத்திற்கு, 6,345 கிலோ தேங்காய் பருப்பு வரத்தானது. இதில், அதிகபட்சம் கிலோ, 91.69 ரூபாய், குறைந்தபட்சம், 88.99 ரூபாய், சராசரியாக, 90.39 ரூபாய் என, 5.34 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. தேங்காய் பருப்பு விலை சரிவால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.