sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

விநாயகர் சிலை 10 அடிக்கு மேல் உயர்த்தி வைக்க கூடாது: கலெக்டர்

/

விநாயகர் சிலை 10 அடிக்கு மேல் உயர்த்தி வைக்க கூடாது: கலெக்டர்

விநாயகர் சிலை 10 அடிக்கு மேல் உயர்த்தி வைக்க கூடாது: கலெக்டர்

விநாயகர் சிலை 10 அடிக்கு மேல் உயர்த்தி வைக்க கூடாது: கலெக்டர்


ADDED : ஆக 29, 2024 02:09 AM

Google News

ADDED : ஆக 29, 2024 02:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், ''விநாயகர் சிலையின் உயரத்தை, 10 அடிக்கு மேல் உயர்த்தி அமைக்க கூடாது,'' என, ஆலோசனை கூட்டத்தில், கலெக்டர் உமா பேசினார்.

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. எஸ்.பி., ராஜேஷ்கண்ணன் முன்னிலை வகித்தார். கலெக்டர் உமா தலைமை வகித்து பேசியதாவது:

விநாயகர் சிலை வைக்க சம்பந்தப்பட்ட சிலை அமைப்பாளர்கள், சம்பந்தப்பட்ட ஆர்.டி.ஓ.,விடம் முன்கூட்டியே தடையின்மை சான்றுக்கு விண்ணப்பிக்க வேண்டும். விநாயகர் சிலையை கரைக்க, ஊர்வலமாக எடுத்து செல்ல திட்டமிடும்போது, ஊர்வலம் செல்லும் வழியில் பிற மதத்தினருக்கு பாதிப்பில்லாத வகையில் இடங்களை முன்கூட்டியே கண்டறிந்து அதற்கேற்றவாறு திட்டமிட வேண்டும். தடை செய்யப்பட்ட, 'பிளாஸ்டர் ஆப் பாரீஸ்' போன்ற மாசு விளைவிக்கும் ரசாயனங்களை பயன்படுத்துதலை தவிர்க்க வேண்டும். விநாயகர் சிலையின் உயரத்தை, 10 அடிக்கு மேல் உயர்த்தி அமைக்க கூடாது.

விநாயகர் சிலைகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களால் அடையாளமிடப்பட்டு குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், குமாரபாளையம், பள்ளிப்பாளையம், மோகனுார், ப.வேலுார் ஆகிய நான்கு இடங்களில் உள்ள ஆற்று பகுதிகளில் படித்துறைகளில் மட்டுமே அனுமதி வழங்கி உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்.டி.ஓ., பார்த்தீபன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் முருகன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரகுநாதன் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us