ADDED : ஆக 07, 2024 01:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமகிரிப்பேட்டை நாமகிரிப்பேட்டையில், இன்று விவசாயிகள் சங்கம் சார்பில் மரவள்ளி உணவு திருவிழா நடக்கிறது.
நாமகிரிப்பேட்டை - ஆத்துார் பிரதான சாலையில், மத்திய கூட்டுறவு வங்கி அருகே உழவர் மன்றம் சார்பில், இன்று மரவள்ளி உணவு திருவிழா நடக்கவுள்ளது. காலை, 10:00 மணிக்கு நடக்கும் இந்த விழாவிற்கு ஏத்தாப்பூர் மரவள்ளி கிழங்கு ஆராய்ச்சி நிலைய தலைவர் கலந்துகொள்கிறார். எனவே, விவசாயிகள் அனைவரும் பச்சை துண்டு உடுத்தி கலந்துகொள்ள வேண்டும் என, நாமகிரிப்பேட்டை உழவர் மன்ற நிர்வாகிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.