sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

உழைக்கும் மக்களுக்கு துணை நிற்போம்: முதல்வர் ஸ்டாலின்

/

உழைக்கும் மக்களுக்கு துணை நிற்போம்: முதல்வர் ஸ்டாலின்

உழைக்கும் மக்களுக்கு துணை நிற்போம்: முதல்வர் ஸ்டாலின்

உழைக்கும் மக்களுக்கு துணை நிற்போம்: முதல்வர் ஸ்டாலின்

9


ADDED : ஆக 15, 2025 12:54 PM

Google News

9

ADDED : ஆக 15, 2025 12:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: உழைக்கும் மக்களுக்கு துணையாக நிற்போம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தனியார் மயம் செய்யக்கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி சென்னை மாநகராட்சி அலுவலகமாக ரிப்பன் மாளிகை முன் துாய்மைப்பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் அமைச்சர்கள், மேயர் பல முறை நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

தொடர்ந்து 13 நாட்களாக போராட்டம் நடத்திய அவர்களை, உயர்நீதிமன்ற உத்தரவுபடி போலீசார் அங்கிருந்து அகற்றினர். கைது செய்யப்பட்டு மண்டபங்களில் அடைக்கப்பட்டனர். அரசின் இந்த நடவடிக்கை பல்வேறு தரப்பினர் மத்தியிலும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி, திமுகவின் கூட்டணி கட்சியினரும் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.

இந்நிலையில், துாய்மைப்பணியாளர்களுக்கு வீடு கட்டித்தருவது, பணியின்போது உயிரிழப்போருக்கு நிவாரணம் உள்ளிட்ட 6 அறிவிப்புகளை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார்.

சென்னையில் தூய்மைப் பணியாளர் சங்கத்தினர் முதல்வர் ஸ்டாலினை இன்று (ஆகஸ்ட் 15) நேரில் சந்தித்து பேசினர். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தூய்மைப் பணியாளர்களின் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகளைச் சந்தித்தேன்.

நேற்று நமது அரசு வெளியிட்ட அறிவிப்புகளுக்கு மகிழ்ச்சி தெரிவித்து, மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அவற்றையும் பரிசீலித்து நிறைவேற்றிக் கொடுப்போம். என்றைக்கும் நாம் உழைக்கும் மக்களுக்குத் துணையாக நிற்போம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us