sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நடுவானில் ஏர் ஏசியா விமானத்தில் கோளாறு; அவசரமாக சென்னையில் தரையிறக்கம்

/

நடுவானில் ஏர் ஏசியா விமானத்தில் கோளாறு; அவசரமாக சென்னையில் தரையிறக்கம்

நடுவானில் ஏர் ஏசியா விமானத்தில் கோளாறு; அவசரமாக சென்னையில் தரையிறக்கம்

நடுவானில் ஏர் ஏசியா விமானத்தில் கோளாறு; அவசரமாக சென்னையில் தரையிறக்கம்


ADDED : ஆக 15, 2025 12:08 PM

Google News

ADDED : ஆக 15, 2025 12:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: மலேசியாவில் இருந்து கோழிக்கோடு நோக்கி சென்று கொண்டிருந்த ஏர் ஏசியா விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால், சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 158 பயணிகள் மற்றும் 8 விமான ஊழியர்களுடன் ஏர் ஏசியா விமானம் ஒன்று, கோழிக்கோடு நோக்கி புறப்பட்டது. நேற்று நள்ளிரவு 12 மணியளவில் சென்னை வான்வெளியில் விமானம் பறந்த போது, தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி அறிந்தார்.

உடனடியாக சென்னை விமான நிலைய அதிகாரிகளை தொடர்பு கொண்ட அவர், அவசரமாக விமானத்தை தரையிறக்க அனுமதி கோரினார். அவர்களும் அனுமதி கொடுத்த நிலையில், விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இதனால், விமானப் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். தொடர்ந்து, அவர்கள் ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.

பிறகு, விமானத்தில் கோளாறு சரிசெய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. தொழில்நுட்ப பிரச்னை சரி செய்யப்பட்ட பிறகு, மீண்டும் இன்று மாலை விமானம் கோழிக்கோடு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us