ADDED : செப் 08, 2024 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டூவீலர் மோதி
தொழிலாளி பலி
பள்ளிப்பாளையம், செப். 8-
பள்ளிப்பாளையம் அருகே,
படவீடு அடுத்த வீராச்சிபாளையத்தை சேர்ந்தவர் ராஜி, 75; கூலித்தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு பச்சாம்பாளையம் பிரிவு பகுதியில் சாலையை கடக்க முயன்றார்.
அப்போது வேகமாக வந்த டூவீலர் இவர் மீது மோதியதில் துாக்கி வீசப்பட்டார். ஆபத்தான நிலையில் சங்ககிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு உயிரிழந்தார். நேற்று வெப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.