ADDED : மார் 27, 2025 01:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலத்தில்தேன்கூடால் அவதி
சேந்தமங்கலம்:சேந்தமங்கலம் டவுன் பஞ்., பழைய பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள போலீஸ் ஸ்டேஷன் அருகே, ஒரு வீட்டில் பெரிய அளவில் தேன்கூடு உள்ளது. இந்த தேன் கூட்டில் உள்ள தேனீக்கள், சில நேரம் அப்பகுதியில் நடந்து செல்வோரையும், டூவீலர்களில் செல்வோரையும் கடித்து வருகிறது. இந்த ரோடு மிகவும் சிறியதாக உள்ளதால், இந்த வழியாக செல்வோர் தப்பித்து ஓட முடியாத நிலை உள்ளதாகவும், இந்த தேன் கூட்டை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.