நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்,நாமக்கல், ராமகிருஷ்ண மாருத்யாதி பஜன கான சபாவின், 111ம் ஆண்டு ராமநவமி உற்சவ விழா, கோட்டை, முல்லை மஹாலில், மே, 6ல் துவங்கி தொடர்ந்து, மூன்று நாட்கள் நடந்தது. இதில், அர்ச்சனை, தீபாராதனை, திவ்ய நாம பஜனை சங்கீர்த்தனம் ஆகியவையும், ராமர்பட ஆவாகனம், அஷ்டபதி மற்றும் பஜனை நடந்தது. மாலை விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து, நேற்று காலை, 10:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், மாலை, 5:00 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், மாலை, 6:00 மணிக்கு திவ்யநாமம், வசந்தகேளிக்கை மற்றும் பவளிம்பு உற்சவம் நடந்தது. இன்று காலை, 9:00 மணிக்கு ஆஞ்சநேயர் உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, ராமகிருஷ்ண மாருத்யாதி பஜன கான சபாவினர் செய்திருந்தனர்.

