/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
139 வீடுகளில் வெள்ளம் புகுந்தது 322 பேர் முகாமில் தங்க வைப்பு
/
139 வீடுகளில் வெள்ளம் புகுந்தது 322 பேர் முகாமில் தங்க வைப்பு
139 வீடுகளில் வெள்ளம் புகுந்தது 322 பேர் முகாமில் தங்க வைப்பு
139 வீடுகளில் வெள்ளம் புகுந்தது 322 பேர் முகாமில் தங்க வைப்பு
ADDED : ஆக 02, 2024 01:26 AM
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் ஆற்றோரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில், 139 வீடுகளில் நீர் புகுந்ததால், 322 பேர் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பள்ளிப்பாளையம் பகுதியில் நாட்டகவுண்டம்புதுார், ஜனதா நகர், ஆவாரங்காடு, பாவடிதெரு, சந்தைபேட்டை, சத்யாநகர் மற்றும் பல பகுதிகள் ஆற்றோரத்தில் உள்ளது. தற்போது மேட்டூர் அணை நிரம்பியதால், அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் ஆற்றில் வெளியேற்றப்படுவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பள்ளிப்பாளையம் ஆற்றோரம் பகுதியில் உள்ள, 139 வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. அங்கு வசித்த மக்கள் தங்களுக்கு தேவையான உடமைகள், ஆதார் அட்டை, ரேஷன்கார்டு, வாக்காளர் அட்டை மற்றும் மற்றும் முக்கிய ஆவணங்களை எடுத்துக்கொண்டு சந்தைபேட்டை, ஆவாரங்காடு, நாட்டகவுண்டம்புதுார், அம்மன்கோவில் பகுதி ஆகிய முகாம்களில், 322 பேர் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு மூன்று வேளை உணவு, நகராட்சி சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் முகாமில் தங்கியுள்ளவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு, மாத்திரை, மருந்து வழங்கப்பட்டு வருகிறது.