/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஜல்லி, எம்.சாண்ட் விலை 100% உயர்வு ரூ.5,000 கோடி அரசு கட்டுமான பணி பாதிப்பு
/
ஜல்லி, எம்.சாண்ட் விலை 100% உயர்வு ரூ.5,000 கோடி அரசு கட்டுமான பணி பாதிப்பு
ஜல்லி, எம்.சாண்ட் விலை 100% உயர்வு ரூ.5,000 கோடி அரசு கட்டுமான பணி பாதிப்பு
ஜல்லி, எம்.சாண்ட் விலை 100% உயர்வு ரூ.5,000 கோடி அரசு கட்டுமான பணி பாதிப்பு
ADDED : பிப் 24, 2025 03:43 AM
நாமக்கல்: ''ஜல்லி, எம்.சாண்ட் விலை, 100 சதவீத உயர்வால், 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு கட்டுமான பணிகள் தமிழ-கத்தில் பாதிக்கப்பட்டுள்ளன,'' என, இந்திய கட்டுனர் சங்க மாநில தலைவர் பழனிவேல், அகில இந்திய தலைவர் விஸ்வ-நாதன், நாமக்கல் மைய தலைவர் தென்னரசு கூறினர்.
நாமக்கல்லில் மூவரும் நேற்று கூறியதாவது:கட்டுமானத்தில் மூலப்பொருட்களாக திகழும் ஜல்லி, எம்.சாண்ட் விலை, 100 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் நடப்பாண்டு மார்ச்சுக்குள், முடிக்க வேண்டிய அரசின் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் தமிழகத்தில், 5,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகள் நிறுத்தப்பட்-டுள்ளன. இந்தாண்டு முடிக்க வேண்டிய அரசின் கட்டுமான பணிகள், அடுத்தாண்டுக்கு கொண்டு சென்றால், அரசுக்கு மிகப்-பெரிய இழப்பு ஏற்படும். இப்பிரச்னைகளுக்கு முதல்வர் ஸ்டாலின், தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தமிழகத்தில் அதிகமான குவாரி, கிரஷர்-களை இயக்க அனுமதி கொடுக்க வேண்டும். அதேபோல் தற்-போது செயல்படும் குவாரிகளில், அதிகளவில் ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் எடுக்க அனுமதி அளிக்க வேண்டும். அவ்-வாறு அனுமதி அளித்தால் மட்டுமே விலை குறையும். தமிழக அரசின் கனவு இல்லம் திட்ட கட்டுமான பணியும் முடங்கியுள்-ளது. தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் அரசு கட்டுமான பணிகளை, ஒப்பந்ததாரர்கள் நிறுத்தி விட்டனர். இவ்வாறு கூறினர்.
எகிறிய விலை விபரம்
பிப்., 1ம் தேதி முக்கால் ஜல்லி ஒரு யூனிட், 3,000 ரூபாயில் இருந்தது. தற்போது, 6,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல் எம்.சாண்ட் ஒரு யூனிட், 4,000 ரூபாயில் இருந்து, 8,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.

