/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆஞ்சநேயர் கோவிலில் 108 பால்குட ஊர்வலம்
/
ஆஞ்சநேயர் கோவிலில் 108 பால்குட ஊர்வலம்
ADDED : ஜூலை 20, 2024 02:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம்;சேந்தமங்கலம் அருகே, மரூர்பட்டி பெரியமலையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீபெருமாள் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவில் அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.இங்குள்ள ஆஞ்சநேயருக்கு, ஆடி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி, நாளை காலை மரூர்பட்டி விநாயகர் கோவிலில் இருந்து, 108 பால்குட ஊர்வலம் நடக்கிறது. தொடர்ந்து, சுவாமிக்கு, 21 மூலிகைகளால் திரவிய அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம், பூஜை, தீபாராதனை நடக்கிறது.