/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாட்டு சந்தையில் ரூ.2 கோடிக்கு வர்த்தகம்
/
மாட்டு சந்தையில் ரூ.2 கோடிக்கு வர்த்தகம்
ADDED : ஆக 28, 2024 08:36 AM
புதுச்சத்திரம்: புதன்சந்தை மாட்டு சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரித்ததால், நேற்று, 2 கோடி ரூபாய்க்கு வர்ததகம் நடந்தது.
புதுச்சத்திரம் யூனியன், புதன்சந்தையில் செவ்வாய்க்கிழமை தோறும் மாட்டுச்சந்தை நடக்கிறது. இந்த சந்தைக்கு, வேலகவுண்டம்பட்டி, புதுச்சத்திரம், நாமக்கல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
இதேபோல், கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் லாரிகளில் மாடுகளை மொத்தமாக வாங்கி சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். நேற்று கூடிய சந்தையில், மாடுகள் வரத்து அதிகரித்து விற்பனையும் அதிகரித்ததால், 2 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.