/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
65 சதவீத ஓட்டுச்சாவடிகளில் 'சிசிடிவி' கேமரா பொருத்தம்
/
65 சதவீத ஓட்டுச்சாவடிகளில் 'சிசிடிவி' கேமரா பொருத்தம்
65 சதவீத ஓட்டுச்சாவடிகளில் 'சிசிடிவி' கேமரா பொருத்தம்
65 சதவீத ஓட்டுச்சாவடிகளில் 'சிசிடிவி' கேமரா பொருத்தம்
ADDED : ஏப் 17, 2024 12:48 PM
நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், நேற்று தேர்தல் நடத்தும் அலுவலர் உமா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. பொதுப்பார்வையாளர் ஹர்குன்ஜித்கவுர் முன்னிலை வகித்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மொத்த ஓட்டுச்சாவடிகளில், 65 சதவீதமான, 1,060 ஓட்டுச்சாவடிகளில், 'சிசிடிவி' கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளது குறித்த ஆலோசிக்கப்பட்டது. அப்போது தேர்தல் அலுவலர் உமா கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தில், பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் கூடுதலாக கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்க தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, ராசிபுரம் சட்டசபை தொகுதியில், 170, சேந்தமங்கலம், 185, நாமக்கல்லில், 188, பரமத்தி வேலுாரில், 165, திருச்செங்கோட்டில், 170, குமாரபாளையத்தில், 182 என மொத்தம், 1,060 ஓட்டுச்சாவடிகளில் கேமரா பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படவுள்ளது. இவற்றில், 174 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை. இவ்வாறு அவர் கூறினார்.

