ADDED : மார் 08, 2025 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம்:ராசிபுரத்தில் கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது. இங்கு தினசரி பட்டுக்கூடு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த பட்டு விவசாயிகள், ராசிபுரத்திற்கு வந்து பட்டுக்கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர்.
நேற்று, 112 கிலோ பட்டுக்கூடு விற்பனையானது. இதில், அதிகபட்சம் கிலோ, 740 ரூபாய், குறைந்தபட்சம், 450 ரூபாய், சராசரி, 591 ரூபாய் என, 112 கிலோ பட்டுக்கூடு, 66,000 ரூபாய்க்கு விற்பனையானது.