/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'உங்களை தேடி உங்கள் ஊரில்' 13ல் கொல்லிமலையில் முகாம்
/
'உங்களை தேடி உங்கள் ஊரில்' 13ல் கொல்லிமலையில் முகாம்
'உங்களை தேடி உங்கள் ஊரில்' 13ல் கொல்லிமலையில் முகாம்
'உங்களை தேடி உங்கள் ஊரில்' 13ல் கொல்லிமலையில் முகாம்
ADDED : ஆக 11, 2024 02:17 AM
நாமக்கல்;'வரும், 13ல், 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டத்தில், பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்படுகிறது' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
பொதுமக்களுக்கு அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் சேவைகள் விரைவில் கிடைக்க, தமிழக அரசால், 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகமும், ஒரு நாள் தாலுகா அளவில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளை கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி மக்களை சென்றடைவதை உறுதி செய்ய உள்ளது.
அதன்படி, கொல்லிமலை தாலுகாவில், வரும், 21ல், 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டம் நடக்கிறது. அதையொட்டி வரும், 13 காலை, 10:00 முதல், மதியம், 1:00 மணி வரை, வாழவந்திநாடு, வல்வில் ஓரி அரங்கில், மண்டல துணை பி.டி.ஓ., தலைமையில் கோரிக்கை மனுக்கள் பெறப்படுகின்றன. இதேபோல், வாழவந்திநாடு, ஆர்.ஐ., திருப்புளி நாடு, ஊர்புறம் மகளிர் சுயஉதவிக்குழு கட்டடம், மண்டல துணை பி.டி.ஓ., தலையைிலும் நடக்கிறது. பொதுமக்கள், தங்களது கோரிக்கைகள் குறித்து மனுக்கள் அளிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

