/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
விபத்தை தடுக்க வேகத்தடை மீது வர்ணம் பூசப்படுமா?
/
விபத்தை தடுக்க வேகத்தடை மீது வர்ணம் பூசப்படுமா?
ADDED : செப் 08, 2024 01:13 AM
விபத்தை தடுக்க வேகத்தடை மீது வர்ணம் பூசப்படுமா?
பள்ளிப்பாளையம், செப். 8-
பள்ளிப்பாளையம், பாலம் சாலையில் உள்ள வேகத்தடை மீது வர்ணம் பூசப்படாததால், இரவு நேரத்தில் விபத்து ஏற்படுகிறது.
பள்ளிப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில், பாலம் சாலையில் சுரங்கப்பாதை அருகே வேகத்தடை உள்ளது. பகல் நேரத்தில் வேகத்தடை இருப்பது, தொலைவில் வரும் போதே வாகன ஓட்டிகளுக்கு தெரியும். இதனால் மெதுவாக, எச்சரிக்கையாக வந்து விடுகின்றனர். இரவு நேரத்தில் வேகத்தடை இருப்பது தெரிவதில்லை, அருகில் வரும் போது தெரிவதால், திணறுகின்றனர்.
நேற்று முன்தினம் இரு பெண்கள், இரவு நேரத்தில் டூவீலரில் செல்லும்போது, வேகத்தடையில் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர். தற்போது தொடர் விபத்து பகுதியாக மாறி விட்டது. எனவே, வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில், வேகத்தடைக்கு வர்ணம் பூசி, இரவில் ஒளிரும் விளக்கு, எச்சரிக்கை பலகை வைக்க நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.