/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தேங்காய் பருப்பு ரூ.8.90 லட்சத்துக்கு வர்த்தகம்
/
தேங்காய் பருப்பு ரூ.8.90 லட்சத்துக்கு வர்த்தகம்
ADDED : ஆக 09, 2024 03:36 AM
ப.வேலுார்: நாமக்கல் மாவட்டம் ப.வேலுார் அருகே வெங்கமேடு தேசிய வேளாண்மை சந்தையில் நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடந்-தது. ப.வேலுார், மோகனூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, கபிலர்மலை ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் தேங்காய்களை கொண்டு வந்தனர்.
கடத்த வாரம் நடந்த ஏலத்திற்கு 10 ஆயிரத்துக்கு 790 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில் அதி-கபட்சமாக கிலோ, 96.70 ரூபாய்க்கும், குறைந்த பட்சமாக, 89.99 ரூபாய்க்கும், சராசரியாக, 94.89 ரூபாய்க்கும் ஏலம் போனது. மொத்தம், 9 லட்சத்து, 35 ஆயிரத்துக்கு வர்த்தகம் நடந்தது.
நேற்று நடந்த தேசிய வேளாண்மை சந்தையில் ஏலத்திற்கு 9 ஆயிரத்துக்கு 390 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்தனர்.
இதில் அதிகபட்சமாக கிலோ,97.81 ரூபாய்க்கும், குறைந்த பட்-சமாக, 90.09 ரூபாய்க்கும், சராசரியாக, 94.55 ரூபாய்க்கும் ஏலம் போனது. மொத்தம், 8 லட்சத்து, 90 ஆயிரத்துக்கு வர்த்தகம் நடந்தது