ADDED : செப் 16, 2024 02:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எருமப்பட்டி: எருமப்பட்டி யூனியன், வரகூர் போயர் தெருவை சேர்ந்தவர் நல்லகண்னு, 60. இவர், நேற்று வீட்டின் முன் உள்ள மெயின் ரோட்டை கடக்க முயன்றார்.
அப்போது, வளையப்பட்டியில் இருந்து அதிவேகத்தில் வந்த, 'மகேந்திரா' வேன், நல்லகண்னு மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். எருமப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.