sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பண்ணை இயந்திரமயமாக்கல் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

/

பண்ணை இயந்திரமயமாக்கல் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

பண்ணை இயந்திரமயமாக்கல் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

பண்ணை இயந்திரமயமாக்கல் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்


ADDED : பிப் 23, 2025 04:04 AM

Google News

ADDED : பிப் 23, 2025 04:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் வட்டாரம், ஒருங்கிணைந்த வேளாண்மை விரி-வாக்க மையத்தில் நேற்று, அட்மா திட்டத்தில் பண்ணை இயந்தி-ரமயமாக்கல், புதிய இயந்திரங்களை பிரபலப்படுத்துதல் பயிற்சி முகாம் நடந்தது. வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் யுவராஜ் தலைமை வகித்தார். அவர், வேளாண்துறை சார்ந்த மத்-திய, மாநில அரசு திட்டங்கள், விவசாயிகளுக்கு தனிகுறியீடு வழங்கும் முகாம் குறித்து விளக்கமளித்தார். துணை வேளாண் அலுவலர் பழனிவேல், 'உயிர் உரங்கள், அதன் பயன்கள் குறித்து எடுத்துக்கூறினார்.

வட்டார தொழில்நுட்ப மேலாளர் கலையரசி, 'அட்மா' திட்ட செயல்பாடுகள், உழவன் செயலி பதிவிறக்கம் மற்றும் பயன்கள் குறித்து கூறினார். இறுதியில், மரவள்ளி குச்சிகளை துாளாக்குதல் குறித்து செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. பி.ஜி.பி., வேளாண்மை கல்லுாரியிலிருந்து கிராமப்புற அனுபவ பயிற்-சிக்கு, மல்லசமுத்திரம் வட்டாரத்திற்கு வந்துள்ள மாணவர்கள், மண்மாதிரி சேகரித்தல் பற்றி விவசாயிகளுக்கு விளக்கமளித்தனர். ஏற்பாடுகளை, உதவிவேளாண்மை அலுவலர்கள் மைதிலி, சரண்யா, அட்மா திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us