/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
20ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
/
20ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
ADDED : செப் 18, 2024 01:55 AM
20ல் விவசாயிகள்
குறைதீர் கூட்டம்
நாமக்கல், செப். 18-
'மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வரும், 20ல், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது' என, கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் மாவட்டத்தில், இம்மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதி விவசாயிகளும் பயன்பெறும் வகையில், வரும், 20 காலை, 10:30 மணிக்கு, கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. கலெக்டர் உமா தலைமை வகிக்கிறார். இக்கூட்டத்தின் மூலம், வேளாண் இடு பொருள் இருப்பு விபரம், வேளாண் உழவர் நலத்துறை மற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மானிய திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன், தங்களது கோரிக்கை
களையும் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.