ADDED : செப் 16, 2024 02:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம்: குமாரபாளையம் தளபதி லயன்ஸ் சங்கம், பவானி, குமாரபாளையம் லயன்ஸ் சங்கம், அகில பாரத ஐயப்ப சேவா சங்கம், ஈரோடு அரசன் கண் மருத்துவமனை சார்பில், நேற்று இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. பட்டய தலைவர் ஜெகதீஷ் தலைமை வகித்தார். 150க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.
இதில், கண் அறுவை சிகிச்சைக்கு, 36 பேர் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட பசிப்பிணி போக்குதல் திட்ட தலைவர் சண்முகசுந்தரம், மாவட்ட தலைவர் மாதேஸ்வரன், பவானி, குமாரபாளையம் லயன்ஸ் சங்க பொருளாளர் சேவியர் ராஜ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.