sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

'பார்சல்' கட்ட தனிக்கட்டணம் வசூலித்த நாமக்கல் அசைவ ஹோட்டலுக்கு அபராதம்

/

'பார்சல்' கட்ட தனிக்கட்டணம் வசூலித்த நாமக்கல் அசைவ ஹோட்டலுக்கு அபராதம்

'பார்சல்' கட்ட தனிக்கட்டணம் வசூலித்த நாமக்கல் அசைவ ஹோட்டலுக்கு அபராதம்

'பார்சல்' கட்ட தனிக்கட்டணம் வசூலித்த நாமக்கல் அசைவ ஹோட்டலுக்கு அபராதம்


ADDED : ஜூன் 14, 2024 01:52 AM

Google News

ADDED : ஜூன் 14, 2024 01:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், பார்சல் கட்ட தனிக்கட்டணம் வசூலித்த, அசைவ ஹோட்டலுக்கு, நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

நாமக்கல் - மோகனுார் சாலை, பாரதி நகரை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் சுப்பராயன், 82. இவர் கடந்த, 2023 ஜன.,ல் நாமக்கல் - மோகனுார் சாலையில் உள்ள அசைவ ஹோட்டல் ஒன்றில், 143 ரூபாய் செலுத்தி சிக்கன் சூப் வாங்கியுள்ளார். அதற்கு வழங்கப்பட்ட ரசீதில், பார்சல் கட்டணம், 6.50- ரூபாய் என, குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, 'பார்சலுக்கு தனி கட்டணம் வசூலித்தது நியாயமற்ற வர்த்தக நடைமுறை' என, சுப்பராயன், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கை விசாரித்த, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி ராமராஜ், உறுப்பினர் ரமோலா ஆகியோர் தீர்ப்பு வழங்கினர். அதில், பார்சலுக்கு கட்டணம் பெற்றுக்கொண்டு உணவகத்தின் பெயரும், முகவரியும் அடங்கிய விளம்பரத்துடன் வாடிக்கையாளருக்கு சிக்கன் சூப் பார்சல் வழங்கப்பட்டுள்ளது. பார்சலுக்கு தனிக்கட்டணம் வசூலிக்கும் போது, சொந்த விளம்பரத்தை செய்தது உணவகத்தின் நியாயமற்ற வர்த்தக நடைமுறையாகும்.

வாடிக்கையாளர் பார்சலுக்காக செலுத்திய, 6.50 ரூபாய், மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 2,000 ரூபாய், செலவு தொகையாக, 1,000 ரூபாய் ஆகியவற்றை, வழக்கு தாக்கல் செய்தவருக்கு ஹோட்டல் நிர்வாகம், நான்கு வாரத்துக்குள் வழங்க வேண்டும்.

மேலும், ஹோட்டல் உரிமையாளர், ஒரு வார காலத்திற்குள் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் ஆஜராகி, பார்சல் கவரில் விளம்பரம் செய்தால், பார்சல் கட்டணம் வசூலிக்க மாட்டோம் என, உறுதிமொழி வழங்க வேண்டும். நிரூபிக்கப்பட்ட நியாயமற்ற வர்த்தக நடைமுறைக்கு, ஏன் ஹோட்டல் உரிமத்தை ரத்து செய்யக்கூடாது? என்பதற்கு சரியான முகாந்திரத்தை வழங்க வேண்டும். இதை செய்ய தவறினால், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலருக்கு, ஹோட்டல் உரிமத்தை ரத்து செய்ய உத்தரவிடப்படும் என, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us