sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

'புதிய சாலை அமைத்து 20வது நாளில் குழாய் பதிக்க பள்ளம் தோண்டுகின்றனர்'

/

'புதிய சாலை அமைத்து 20வது நாளில் குழாய் பதிக்க பள்ளம் தோண்டுகின்றனர்'

'புதிய சாலை அமைத்து 20வது நாளில் குழாய் பதிக்க பள்ளம் தோண்டுகின்றனர்'

'புதிய சாலை அமைத்து 20வது நாளில் குழாய் பதிக்க பள்ளம் தோண்டுகின்றனர்'


ADDED : ஜூன் 29, 2024 02:57 AM

Google News

ADDED : ஜூன் 29, 2024 02:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்செங்கோடு: திருச்செங்கோடு நகராட்சி சாதாரண கூட்டம், நகராட்சி கூட்ட அரங்கில், தலைவர் நளினி சுரேஷ்பாபு தலைமையில் நடந்தது. கமிஷனர் சேகர், பொறியாளர் சரவணன் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:

மாதேஸ்வரன், தி.மு.க.,: குப்பையை சேகரித்து வைக்க இடமில்லாததால், துாய்மை பணியாளர்கள் சரியாக குப்பையை வாங்க வருவதில்லை. குரங்கு தொல்லை அதிகம் உள்ளது. பலமுறை புகார் கூறியும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நகராட்சி நினைத்தால், ஒரே நாளில் இந்த பிரச்னைக்கு தீர்வு காணலாம்.

ராஜவேல், அ.தி.மு.க.,: கோழிக்கடை கழிவுகளை சாக்கடைகளில் கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இவைகளை வாங்கி எரித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சேகர், கமிஷனர்: குப்பை எரிக்க, ஆறு மாத காலத்திற்குள் இயந்திரம் வாங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், ஐந்து இடங்களில் குப்பை பிரிக்கும் மையம் வைக்கப்பட்டுள்ளது. குப்பையை வாங்குபவர்கள் எரிக்க கூடாது என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினேஷ், பா.ஜ.,: குப்பையை எடுத்து செல்லாமல் தேங்கி கிடக்கிறது. பெரிய வார்டு, ஒரே ஒரு பேட்டரி வாகனம் மட்டுமே உள்ளது. கூடுதலாக இன்னொரு பேட்டரி வாகனம் வழங்க வேண்டும். சாக்கடைகளில் உறிஞ்சு வாகனம் வைத்து, கழிவுநீர் அகற்றப்படாமல் கொசு தொல்லை அதிகளவில் உள்ளது.

கமிஷனர்: இன்னும் ஒரு வார காலத்திற்குள் உறிஞ்சு வாகனம், நகராட்சிக்கு வந்துவிடும். அதுவரை தற்காலிகமாக உள்ள வாகனத்தை ஒரு நாள் விட்டு ஒரு நாள் பயன்படுத்தப்படும்.

ரவிக்குமார், தி.மு.க.,: எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், 20 நாட்களுக்கு முன் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. ஆனால், அதற்குள், உப்பு நீர் குழாய் அமைக்க பள்ளம் தோண்டி வருகின்றனர். சாலை அமைத்தும் பயனில்லை.

இவ்வாறு விவாதம் நடந்தது.






      Dinamalar
      Follow us