sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தேர்தல் ஆணைய விதிமுறைக்கு உட்பட்டு தண்ணீர் பந்தல் திறக்க அனுமதி: கலெக்டர்

/

தேர்தல் ஆணைய விதிமுறைக்கு உட்பட்டு தண்ணீர் பந்தல் திறக்க அனுமதி: கலெக்டர்

தேர்தல் ஆணைய விதிமுறைக்கு உட்பட்டு தண்ணீர் பந்தல் திறக்க அனுமதி: கலெக்டர்

தேர்தல் ஆணைய விதிமுறைக்கு உட்பட்டு தண்ணீர் பந்தல் திறக்க அனுமதி: கலெக்டர்


ADDED : மே 02, 2024 07:37 AM

Google News

ADDED : மே 02, 2024 07:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், : 'தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு உட்பட்டு, அரசியல் கட்சியினர் தண்ணீர் பந்தல்கள் திறக்கலாம்' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கோடை காலத்தில் தாகம் உள்ள மக்களுக்கு இலவசமாக தண்ணீர் வினியோகம் செய்ய, தண்ணீர் பந்தல் திறப்பதற்கான அரசியல் கட்சிகளின் முன்மொழிவின் அடிப்படையில், இந்திய தேர்தல் ஆணையம், தேர்தல் நடத்தை விதிகளின் அடிப்படையில், தண்ணீர் பந்தல்கள் திறக்க எந்த ஆட்சேபனையும் இல்லை என தெரிவித்துள்ளது.

எந்த ஒரு அரசியல் கட்சியும், வேட்பாளரும் இந்த செயல்பாட்டின் மூலமாக, எவ்விதத்திலும் அரசியல் ரீதியாக பயன்பெறக்கூடாது. தண்ணீர்பந்தல் திறப்பின் போது, தேர்தல் நடத்தை விதிகள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

தண்ணீர்பந்தல் திறக்க விரும்பும் எந்தவொரு அரசியல் கட்சியும், வேட்பாளரும், தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு, சுகாதாரம், துாய்மையான குடிநீர் தொடர்பான அரசாங்கத்தின் பிற அறிவுறுத்தல்களையும் கடைப்பிடிக்க வேண்டும்.

அரசியல் கட்சிகளின் கோரிக்கை அடிப்படையில், தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி, தண்ணீர் பந்தல்கள் திறக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அனுமதிக்கலாம். அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளும், அவரவருடைய எல்லைக்குள், தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி சரியான முறையில் தண்ணீர்பந்தல் செயல்பாடுகள் நடப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us